சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடியில் உள்ள மருத்துவ குறிப்புகளின் படி மனித உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்துகள் உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பது ஆதாரபூர்வமானமான உண்மை
சித்தா மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அவசரத்திற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஆங்கில மருத்துவ மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம், இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. சித்தா மருந்துகளை எடுத்துக்கொண்டால் பத்தியம் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அதையே சித்த மருத்துவத்தில் பத்தியம் என்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடனும், பரிசோதனை முறைகளுடனும்தான் இன்றைய சித்த மருத்துவம் இருக்கிறது.